கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

2.1.10

8.கல்கண்டு வடை

தேவையான பொருட்கள்
1.உளுந்து - 2 உழக்கு
2.வெல்லம் அல்லது கல்கண்டு - ருசிக்கேற்ற அளவு
3.ஏலக்காய்- சிறிது
4.எண்ணெய் - தேவையான அளவு

          உளுந்தை நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.தண்ணீருக்குப் பதில் வெல்லத்தை அல்லது கல்கண்டை பொடித்துப் போட்டு,ஏலக்காயையும் போட்டு அரைத்து வழிக்கவும்.இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை வடையாகத் தட்டிப் போட்டு நன்றாக வெந்ததும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும் அடுப்பு நிதானமாக எரிய வேண்டும்.எண்ணெய் புகைந்தால் வடை உள்ளே மாவாக வெளியில் கருப்பாக இருக்கும்.இந்த வடை கணிசமாக,சுவையாக இருக்கும்.மாவு தளர்வாக இருந்தால் மைதா கலந்து கொள்ளவும்.

1 கருத்து: