கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

5.1.10

11.மணகோலம்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 1 உழக்கு
2.பாசிப்பருப்பு -1 உழக்கு
3.உளுந்து - 1 உழக்கு
4.தேங்காய் - 1
5.பொட்டுக்கடலை - சிறிது
6.எண்ணெய்
7.வெல்லம் - 3/4 கிலோ


                  பாசிப்பருப்பு,உளுந்து,பச்சரிசி மூன்றையும் கருகாமல்வறுத்து கலந்து சன்னப்பொடியாக அரைத்து சலித்து தண்ணீர்,சிறிது (அரை உப்பு ருசிக்கு) உப்பு சேர்த்து முறுக்கு மாவு போல் கெட்டியாக பிசைந்து உருட்டி வைத்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிக்கொள்ளவும்.மாவு காயக்கூடாது.இப்போது மணகோல க்கட்டையில் (மிக்சரை விட கொஞ்சம் துளை பெரிதாக இருக்கும்) மாவைப் போட்டு காயும் எண்ணெயில் நேரடியாகை பிழிந்து கருகாது எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை நிறம் மாறாது வறுத்துக்கொள்ளவும். தேங்காயைக் கீறி பல்லுப்பல்லாக நறுக்கி நன்றாக ஈரமில்லாமல் வறுத்துக் கொள்ளவும்.வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒரு கை தண்ணீரைத் தெளித்து முற்றின பாகாக எடுத்துக்கொள்ளவும்.இந்தப்பாகில் பிழிந்து உதிர்த்த மணகோலம்,பொட்டுக்கடலை,தேங்காய் ஆகியவற்றைக் கலந்து சற்று நேரம் வைத்தால் வெல்லம் பூத்து உதிரியாகிவிடும்.நல்ல ருசியுடன்,பொறு,பொறுவென இருக்கும் இந்தப்பலகாரமும் ஒரு சீர்ப்பலகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக