கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

2.1.10

7.கந்தரப்பம்.

தேவையான பொருட்கள்
1.பச்சரிசி - 2 உழக்கு
2.உளுந்து - 1/2 உழக்கு
3.வெல்லம் - 600 கிராம்
4.தேங்காய் - ஒரு மூடி
5.ஏலக்காய்- சிறிது
6.எண்ணெய் - தேவையான அளவு

              அரிசி,உளுந்து இரண்டையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.நன்றாக அரைபட்டதும் வெல்லத்தையும் பொடித்துப் போட்டு,ஏலக்காயையும் போட்டு அரைத்து வழிக்கவும்.தேங்காயைத் துருவி மாவோடு கலந்து கொள்ளவும்.இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை நன்றாகக் கலந்து குழிகரண்டியில் எடுத்து ஊற்றவும்.பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.கணிசமாக,சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக