கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

5.1.10

13.தேன் குழல்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.உளுந்து - 1 3/4 உழக்கு
3.எண்ணெய்
4.உப்பு - ருசிக்கேற்ப

           பச்சரிசியை நன்றாகக் களைந்து நன்றாகக் காயவைக்கவும்.ஈரமிருந்தால் தேன் குழல் மொறுமொறுப்பாக இராது.உளுந்தை நன்றாக வாசம் வரும் வரை பொன்நிறமாக வறுத்து காயவைத்த அரிசியுடன் கலந்து சன்னப்பொடியாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்தமாவில் தேவையான அளவு எடுத்து உப்புக்கரைத்த நீர் கலந்து வெண்ணெய் போல் கெட்டியாக பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பெரிய முறுக்குகளாகப் பிழிந்து எடுக்கவும். தேன் குழல் சிவக்கக்கூடாது.வெண்ணெய் நிறத்தில் இருக்க வேண்டும். இந்தத் தேங்குழல் திருமணத்தில் மறுவழிப்பலகாரம்,ஆடிப்பலகாரம் போன்ற சீர்களுக்குக் கொடுப்பதுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக