கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

17.1.10

நெல் குதிர்,கதிர்க்களம், பத்தாயம்

விளைச்சலின்றி
வெறுமையாகிப்போன வயல்களால்
கதிர்க்களமும்
நெற்குதிரும் அர்த்தமற்று...
கேள்வியில் துளைத்து
பதிலுக்குத் திணறும் நான்.
குட்டிக்குழந்தைகளுக்கு எக்காளம்.
எப்படிச்சொல்வது?

திண்ணைகளற்றுப்போனதால்
சிரிப்பும் பேச்சுமற்ற தெருக்கள்
சுவர்களில் வேலி எழுப்பி
பக்கத்து வீடு
பாகிஸ்தானைப்போல
நெற்குதிர்,
பத்தாயம் விடை தேடி
பாட்டி வீடு போனால்
பாட்டியோ
வெற்றிலை குதப்பி ஊடகத்தில் விழிகள் நாட்டி
"நெல்லுக்கொட்டறதுன்னு சொல்லு"

நெல் விளையும் மரம் எது?
எப்படிச்சொல்ல பதிலை?
எப்படிச்சொல்ல
எக்காளம் மறைய!
யோசித்துக்கடக்கையில்
கண்களில் பட்டது
சிட்டுக்குருவி அலகிலிருந்து
தவறிவிழுந்த நெல்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக