கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

5.1.10

12.கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.கருப்பட்டி- 600 கிராம்
3.எண்ணெய் 

              பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து இடித்து அதிரசத்திற்கு போல் மாவாக்கிக்கொள்ளவும். கருப்பட்டியை தூளாக்கி 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு,தண்ணீரில் விட்டால் கரையாத அளவு பாகாகக் காய்ச்சி அதில் மாவைப்போட்டு கலந்து கொள்ளவும்.கலந்த மாவை மறு நாள் தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.கரைத்த மாவில் தேவையானால் சிறிது பாசிப்பருப்பை வேகவைத்து கலந்தும் பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

            இந்தப் பணியாரம் படைப்பு பணியாரம் என்போம். கருப்பர் மற்றும் எங்கள் ஊர் பெண்தெய்வங்களுக்கு படையல் போடுவதற்கு சுத்தமான நெய்யில் பெரிய பணியாரங்களாகச்சுட்டுப் படைப்பது வழக்கம்.நல்ல ருசியுடன் இருக்கும் இந்தப்பணியாரம் சத்தானதும் கூட..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக