கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

5.1.10

10.சீப்புச்சீடை

தேவையான பொருட்கள்

1.பச்சரிசி - 4 உழக்கு
2.பாசிப்பருப்பு -1 3/4 உழக்கு
3.பொட்டுக்கடலை அல்லது உளுந்து - 1 3/4 உழக்கு
4.தேங்காய் - 1
5.எண்ணெய்
6.உப்பு - தேவையான அளவு

பச்சரிசியை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து இடித்து சலித்து மணல் போல வறுத்துக்கொள்ளவும்.பாசிப்பருப்பு,உளுந்து இரண்டையும் கருகாமல் வறுத்து சன்னப்பொடியாக அரைத்து சலித்து அரிசி மாவோடு கலந்து கொள்ளவும்.தேங்காயைத் துருவி அரைத்து மூன்று பால் வரை தனிதனியே எடுத்துக் கொள்ளவும்.முதல் பாலை சுடவைத்து (கொதிக்கக்கூடாது) உப்பை அதில் கரைத்து மாவில் ஊற்றிக் கலக்கவும்.பால் போதாத போது இரண்டாவது பாலை சுடவைத்து கலந்து முறுக்கு மாவு போல் கெட்டிய பிசைந்து உருட்டி வைத்து ஒரு ஈரத்துணி போட்டு மூடிக்கொள்ளவும்.மாவு காயக்கூடாது.இப்போது சீப்புச்சீடைக் கட்டையில் (பட்டையாக மேலே வரி விழுவதற்கான முட்களுடன் இருக்கும் சில்) பழைய செய்தித்தாளை விரித்து அதில் நீளமாகப் பிழிந்து விடவும்.பிறகு கத்தி கொண்டு நான்கு இஞ்சி நீளத்தில் வெட்டி இரு முனைகளையும் ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.இது மோதிரம் போன்ற வடிவத்துடன் இருக்கும்.நல்ல ருசியுடன்,பொறு,பொறுவென இருக்கும் இந்தப்பலகாரமும் ஒரு சீர்ப்பலகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக