கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

22.12.09

1.வெள்ளைப் பணியாரம்

            செட்டிநாட்டுப் பலகாரங்கள்ல அதிகம் பேசப்படுற பலகாரம் இது தாங்க.அன்னக்கிளி படத்துல திரு பஞ்சு அருணாச்சலம் அவர்கள் முத்துச்சம்பா பச்சரிசி பாட்டுல சொல்லுவார் பாருங்க,அதுமாதிரி பஞ்சு பஞ்சா இந்த வெள்ளைப் பணியாரம் இருக்கக்கூடாது.முட்டையோட வெள்ளைக்கரு இருக்கும் பாருங்க அப்புடி இழையா,மென்மையா இருக்கணும்.சில பேர் வெள்ளைப் பணியாரத்துக்கு நாலிக்கு ஒண்ணு,அதாவது பச்சரிசி நாலு உழக்கு போட்டா,ஒரு உழக்கு உளுந்து போடுவாக.அப்புடிப் போட்டா வெள்ளைப்பணியாரம் கந்தரப்பம் ஆயிடும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி
உளுந்து
பால்
உப்பு
சமையல் எண்ணெய்

          முதலில் பச்சரிசியை உழக்கில் எடுக்கும் போது உழக்கை தலைவழித்து என்பார்களே அப்படி மட்டமாக அளந்து அதன் உச்சியில் உளுந்தைக் குவித்து அளக்கவும்.இப்படி உங்களுக்கு எவ்வளவு தேவையோ அளந்து எடுத்து நன்றாகக் களைந்து (இல்லாவிட்டால் பணியாரம் நிறம் மட்டாக இருக்கும்) ஊற வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறியதும் ஆட்டுரலில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு மாதிரி பதத்தில் இருக்கலாம்.உப்புப் போட்டு அரைத்து எடுத்து கொஞ்ச நேரம் குளிர் சாதனப்பெட்டியில் (10 நிமிடம்) வைத்து எடுத்து கரண்டியால் முட்டை அடிப்பது போல் அடித்து சிறிது பால் கலந்து மறுபடி அடித்துக் கொள்ளவும்.அலுமினியம் அல்லது இரும்பு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து சிறு குழி கரண்டியில் மாவு எடுத்து ஊற்றி பணியாரம் மேலே மிதக்கும் போது அரி கரண்டியை வைத்து எண்ணெயை பணியாரம் மீது தள்ளிவிடவும் (பாத்துங்க! மேல பட்டு கொப்புளிச்சா நா பொறுப்பில்ல) வெள்ளை நிறம் மாறுமுன்னே எடுத்து விடவும்.இந்தப் பணியாரத்திற்கு மிளகாய்ச்சட்னி தான் சரியான இணை.

2 கருத்துகள்: