கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

26.12.09

3.மசாலாச்சீயம்

தேவையான பொருட்கள்:

1.பச்சரிசி - 1 உழக்கு
2.உளுந்து - 3/4 உழக்கு
3.தேங்காய் - 1 மூடி (பெரியது)
4.சின்ன வெங்காயம் - சிறிது
5.பச்சை மிளகாய் - 4
6.கடுகு - சிறிது
7.கறிவேப்பிலை - சிறிது
8.உப்பு
9.எண்ணெய்

         அரிசி,உளுந்து இரண்டையும் நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ஆட்டுரலில் ஒட்டு ஒட்டாக அரைத்து ஓரளவு கெட்டியாக ஆட்டி ருசிக்கேற்ற உப்புப்போட்டு அரைத்து எடுக்கவும்.தேங்காயைத் துருவி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கவும்.அடுப்பில் இருப்புச்சட்டியைக் காயவைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,வாசனை வந்ததும் தேங்காய்த் துருவலையும் போட்டு வதக்கி ஆட்டி எடுத்த மாவில் இந்தக்கலவையைக் கலந்து எண்ணெயைக் காயவைத்து அதில் மாவை சிறிது பெரிதாக கைவிரல் நுனியில் கிள்ளி விடவும்.எண்ணெய் புகையக்கூடாது.நன்றாக வெந்ததும் பொன்நிறமாக எடுத்து விடவும்.தேங்காய் ,வெங்காயம் வதக்கி அரைத்த சட்னியுடன் பரிமாறவும்.பால் பணியாரத்திற்கு அரைக்கும் மாவிலேயே இதையும் செய்து விடலாம்.இந்தப் பலகாரம் கணிசமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக