கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

20.12.09

முளைக்கொட்டுப்பாட்டு

 ஒரு முளைக்கொட்டுப்பாட்டு

தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே
தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே

ஆண (யானை) வாரதப்பாருங்கடி
ஆண அசஞ்சு வாரதப்பாருங்கடி
ஆணத் தடம் போல ஐயனார் சாமிக்கு
அட்டிய மின்னலப் பாருங்கடி (தன்னன)

குதுர (குதிரை) வாரதப் பாருங்கடி
குதுர குதிச்சு வாரதப்பாருங்கடி
குதுரத்தடம் போல ஐயனார் சாமிக்கு
கொலுசு மின்னலப் பாருங்கடி (தன்னன)

பாம்பு வாரதப் பாருங்கடி
பாம்பு பதுங்கி வாரதப்பாருங்கடி
பாம்புத் தடம் போல ஐயனார் சாமிக்கு
பதைக்க (பதக்கம்) மின்னலப் பாருங்கடி (தன்னன)

தேங்கா உடைக்கவே தண்ணி தெரிக்கவே
தெப்பக்குளம் ரெண்டும் தத்தளிக்க
மாயவன் தங்கச்சி மதுர மீனாச்சி
எப்ப வருவாளோ தெப்பம் பாக்க (தன்னன)

பாலை (ஒரு வகைப்பழம்) பழுத்ததைப் பாருங்கடி
பாலை பக்கம் பழுத்ததைப் பாருங்கடி
பாலைப்பழம் போல பாலைய நாட்டார்க்கு
பல்லு வரிசையப் பாருங்கடி

தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே
தன்னென நாதினம் தன்னானே தனத் தன்னென நாதினம் தன்னானே

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக