கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

28.12.09

5.மாவு உருண்டை

தேவையான பொருட்கள்

1.பாசிப் பருப்பு - 2 உழக்கு
2.பச்சர்சி - 1/2 உழக்கு
3.சீனி - 2 1/2 உழக்கு
4.நெய் - தேவையான அளவு

         பாசிப்பருப்பையும் பச்சரிசியையும் தனிதனியே பொன்னிறமாக வறுத்து சன்னமாக பொடித்துக்கொள்ளவும்.சீனியையும் சன்னமாகப்பொடிக்கவும்.இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.பிறகு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காயவைத்து நெய்யை ஊற்றி காய்ந்ததும் மாவைக்கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கி வைத்து உருண்டைகளாகப்பிடிக்கவும்.ஆறிவிட்டால் நெய் உறைந்து பிடிக்க முடியாது உதிரும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாகச்செய்து கொள்ளவும்.நெய் பிடிக்காதவர்கள் டால்டாவையும் பயன் படுத்தலாம்.எங்கள் ஊரில் இது சீர்ப் பலகாரம்.செய்வதும் சுலபம்.உடலுக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக