கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

26.12.09

2.பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:

1.பச்சரிசி - 1 உழக்கு
2.உளுந்து - 3/4 உழக்கு
3.தேங்காய் - 1 மூடி (பெரியது)
4.சீனி - தேவையான அளவு
5.எண்ணெய் - தேவையான அளவு
           அரிசி,உளுந்து இரண்டையும் நன்றாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ஆட்டுரலில் ஒட்டு ஒட்டாக அரைக்கவும்.அரைக்கும் போது சுற்றி வழித்து விட்டு குருணை இல்லாமல் கெட்டியாக ஆட்டி எடுக்கவும். குருணை இருந்தால் பணியாரம் வெடிக்கும்.ஆட்டி எடுத்ததும் எண்ணெயைக் காயவைத்து அதில் மாவை சிறியதாக கோலிக்குண்டு அளவில் கைவிரல் நுனியில் கிள்ளி விடவும்.எண்ணெய் புகையக்கூடாது. புகைந்தால் பணியாரம் நிறம் மாறிவிடும்.நன்றாக வெந்ததும் நிறம் மாறாது எடுத்து விடவும்.தேங்காயைத் துருவி,நன்றாக அரைத்துப் பால் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதில் சீனியைக் கொட்டி கரைத்துக் கொள்ளவும்.பணியாரத்தை சிறிது தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து தேங்காய்ப்பாலில் ஊறவைத்துப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக