கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

26.12.09

4.கும்மாயம்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 உழக்கு
உளுந்து - 1 உழக்கு
பச்சரிசி - 1 உழக்கு
கருப்பட்டி 
நெய் 

              பருப்பு வகைகளை தனித்தனியே வறுத்து, பச்சரிசியையும் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து சன்னமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.இதில் தேவையானளவு எடுத்து அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் மாவைப்போட்டு புரட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.இனிப்பிற்குத் தேவையான அளவு கருப்பட்டி எடுத்துத் தூளாக்கி சிறிது தண்ணீர் கலந்து பாகு காய்ச்சவும்.நன்றாக வாசனை வந்ததும் வடிகட்டி மாவுடன் கட்டியில்லாமல் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும்.இடையிடையே நெய் சேர்த்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். ருசியுடன் சத்தும் நிறைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக