கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

20.12.09

முளைக்கொட்டுப் பாடல் (கும்மி)

தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே
தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே 


சாலையோரம் குச்சுக்கட்டி தங்கிப்போவோம் பொண்ணே
சாலைக்காரன் கண்டவொடன ஓடிப்போவோம் பொண்ணே 
இன்னங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா) 


மந்தையோரம் குச்சுக்கட்டி மழைக்கிருப்போம் பொண்ணே
மந்தைக்காரன் கண்டவொடன ஓடிப்போவோம் பொண்ணே
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா)  


ஈச்சம்பத்தை இருண்ட பத்தை இருந்து போவோம் பொண்ணே 
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா 
தாழம் பத்தை தழைஞ்ச பத்தை தங்கிப்போவோம் பொண்ணே
இன்னுங்கொஞ்சம் பொழுதிருக்கு எட்டி நட அண்ணா (தனத்தந்தினா)  


அடி அண்ணா அண்ணா என்காதடி அறிவுகெட்ட பொண்ணே 
அட பொண்ணே பொண்ணே என்காதடா புத்திகெட்ட அண்ணா 


ஆலோலங்கிளி ஆலோலம் அன்னக்கிளிகளாம் ஆலோலம்
நெட்டிக்கா (ய்), சுட்டிக்கா(ய்) நிறஞ்ச காது ஓலக்கா(ய்) 
மாரிக்கா(ய்) சோளிக்கா(ய்) மஞ்ச நல்ல சரட்டுக்கா(ய்)
அட நெட்டிக்கா (ய்), சுட்டிக்கா(ய்) நிறஞ்ச காது ஓலக்கா(ய்) 
அட மாரிக்கா(ய்) சோளிக்கா(ய்) மஞ்ச நல்ல சரட்டுக்கா(ய்)


தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே 
தனத்தந்தினா தனத்தந்தினா தனத்தந்தினா தானே









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக