கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

29.12.09

6.உக்காரை

தேவையான பொருட்கள்

1.பாசிப்பருப்பு - 1 உழக்கு
2.ரவை அல்லது பச்சரிசி மாவு -1 உழக்கு
3.வெல்லம் - 600 கிராம்
4.தேங்காய் - 1 மூடி
5.நெய் அல்லது டால்டா -1/4 கிலோ
6.முந்திரி -25 கிராம்

             முதலில் பாசிப்பருப்பை வறுத்து பதமாக வேகவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.ரவை அல்லது பச்சரிசி மாவை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.பின் அடிகனமான பாத்திரத்தைக் காயவைத்து சிறிது நெய் ஊற்றிக்காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு அதே நெய்யில் தேங்காய்த்துருவலை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு எல்லா நெய்யையும் ஊற்றி காய்ந்ததும் ரவையைக் கொட்டி நன்றாக வறுத்துக்கொண்டு பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து ரவையில் ஊற்றிக் கிளறவும்.பச்சரிசி மாவாக இருந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் அதிகம். அதனால் பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீரை தெளித்துக் கிளறவும்.மாவு நன்றாக வெந்ததும் வடிகட்டிய பருப்பு,வதக்கிய தேங்காய் கொட்டிக்கிளறவும்.நன்றாக சுருண்டு வந்ததும் வெல்லத்தை தூளாக்கி சேர்த்து நன்றாகக் கிளறி, முந்திரி சேர்த்து, இறக்கவும். பாசிப்பருப்பு குழைந்து விட்டால் அல்வா போன்ற சுவையுடனும்,பதமாக இருந்தால் உதிரியாகவும் இருக்கும்.உக்காரை மீந்துவிட்டால் பூரண உருண்டைகளாக உருட்டி மாவில் நனைத்துப் போட்டால் இனிப்புச்சீயம் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக