கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

2.5.10

விடுமுறை.

நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

8.4.10

தாலாட்டு - 3

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!

காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!

பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

தாலாட்டு

இன்று தமது மழலைச்செல்வங்களை தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்களா? தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் கடந்த காலத்தின் மிச்சங்களாய் இருக்கும் பெரியவர்கள் தாலாட்டுப்பாடினால் உண்டு. அவர்கள் பாடிய தாலாட்டின் மிச்சங்களை திரைத்துறை பயன் படுத்திக்கொள்கிறது. அதைக்கேட்டதும் அடடா! என்ன மெலொடி என்று சிலிர்க்கும் நாம் அது நம் தாய் பாடிய தாலாட்டு என்பதை நமது நினைவடுக்கில் தேடி நினைவு கூர்வதற்குள் நேரமாகி விடுகிறது.

நாட்டுப்புறப் பாடல் ஆய்வு செய்பவர்களும், தமிழ்த்துறை ஆசிரியர், மாணவர் பெருமக்களும் தாலாட்டுப்பாடல்களை அறிந்து வைத்திருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்கள்.புதுச்சேரி பாரதி தாசன் அரசுக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தனது தமிழ்த்துறை மாணவர்களுக்கு தாலாட்டு மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடிக்காட்டுவார்களாம். இப்படி சிலரின் முயற்சியால் தான் நமது பழமை பொக்கிஷங்கள் காப்பாற்றப்படுகின்றன. 

இன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை இருக்கையில் அமரவைத்து அல்லது படுக்க வைத்து தொலைக்காட்சியையோ அல்லது குறுந்தகட்டில் பாடல்களையோ சுழல விட்டு தமது வேலைகளைத் தொடர்கிறார்கள்.தாலாட்டுப்பாடுவதால் குழந்தைகள் சீக்கிரம் வளரும் என்றொரு கருத்து எங்களின் செட்டிநாட்டு கிராம மக்களிடம் உண்டு.அவர்கள் பாடும் போது அந்தப்பாட்டின் இனிமை, அதில் கூறப்படும் தமது வம்சப்பெருமை, சொற்கட்டு, அன்பு, பாசம் இவையெல்லாம் நம்மை நெகிழ வைத்துவிடும்.இதோ அப்படி ஒரு தாலாட்டு.

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!

காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!

பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

3.4.10

விளந்தானை பாட்டு


தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே 

பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )

அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )

கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)

ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )

குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )

நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )

வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே

பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)

வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)

ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)

ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)

பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)

சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)

மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)

காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா

மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)

பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே 

கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)

மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)

அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)

கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன் 
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)

மாரியம்மன் பொங்கலும், முளைப்பாரியும்

எங்கள் பாலைய நாடு பதினாறு கிராமங்களிலும் பங்குனி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பொங்கல் விமரிசையாக நடக்கும்.ஏதாவது ஒரு திங்கட் கிழமையில் காப்புக்கட்டி, அடுத்து வரும் ஒன்பதாவது நாள் செவ்வாய்க்கிழமையில் பொங்கல் வைத்து திருவிழா முடியும். பெரும்பாலும் பங்குனி மாதத்தின் அனைத்து செவ்வாய்க்கிழமைகளுமே ஏதாவது ஒரு ஊரில் மாரியம்மன் பொங்கலாகத்தான் இருக்கும்.எட்டு நாள் காப்புக்கட்டி, ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமைகளில் ஊர் ஒன்று கூடி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, கோழி,ஆடு வெட்டி பலியிட்டு சமைத்து,மாவிளக்கு,அரியரிசி,துள்ளுமாவு,இளநீர்,பானகம், நீர்மோர், வேப்பிலைக்கரகம் வைத்துப்படைப்பது வழக்கம்.கோடையின் வெக்கையில் அம்மை போன்ற நோய்கள் தாக்காமலிருக்க கொண்டாடப்படும் இந்த எட்டு நாட்களும் வீடுகளின் முகப்பில் வேப்பிலை செருகப்பட்டிருக்கும்.ஊர் கூடி முளைப்பாரி போட்டு ஊர்ப்பொது இடமான பிள்ளையார் கூடத்தில் கொண்டுவந்து வைத்து விடிய விடிய முளைக்கொட்டுவதும் (கும்மி கொட்டுவது) உண்டு.முளைப்பாரி போடும் வீடுகளில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். வெளியார் யாரையும் வீடுகளின் உள்ளே விட மாட்டார்கள்.



முளைப்பாரி போடும் முறை.

பங்குனி மாதத்தில் ஒரு திங்கட்கிழமை காப்புக்கட்டி, அடுத்துவரும் வியாழனன்று முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு ஓடுகள் மண்,பளிங்கு,மங்கு,எவர்சில்வர் என்று அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து,கழுவி,காய வைப்பார்கள்.அந்த ஓடுகள் ஒரு குடத்தை பாதியில் வெட்டிய வடிவில் இருக்கும். அதன் வாய்ப்பகுதி தரையில் படும்படி வைத்து முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு காய்ந்த மாட்டுச்சாணம் சேகரிப்பார்கள்.முதலில் முளைப்பாரி ஓட்டில் பெரிய மாட்டுச்சாணக்கட்டிகளை பரப்பி,அதன் மேல் சிறிய கட்டிகளைப்பரப்பி, அதன் மேல் மாட்டுச்சாணத்தை உடைத்து, சல்லடை கொண்டு சலித்து, அந்த சலித்த மணல் போன்ற சாணத்தை பரப்பி அதன் மீது முளைப்பாரிக்கு போடவேண்டிய விதைகளைப்பரப்புவார்கள். பெரும்பாலும் முளைப்பாரிக்கு நடுவில் சோளம்,மொச்சை, தட்டைப்பயறு விதைகளும், ஓரத்தில் சுற்றிப்போட கேப்பை (கேழ்வரகு) போடுவார்கள்.சிலர் அழகுக்காக நெருஞ்சி,கொழுஞ்சி விதைகளைப்போடுவார்கள்.பிறகு அதன் மேல் மறுபடி சலித்த சாணத்தைப்போட்டு, சல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவார்கள்.பிறகு கூடையைக் குப்புறப்போட்டு மூடி வைப்பார்கள். தினமும் இரு வேளையும் குளித்து, முளைப்பாரிக்கு தண்ணீர் காட்டுவார்கள். மாலை நேரம் விளக்கேற்றி சாமி கும்பிட்டு, முளைப்பாரிக்கும் தீப,தூபம் காட்டுவார்கள். பிறகு மாரியம்மன் பொங்கலன்று வீட்டில், கோவில் வாசலில் அவரவர் வழக்கப்படி பொங்கல் மற்றும் சம்பிரதாயங்கள் முடித்து பள்ளயம் போட்டு பூஜை செய்வார்கள். பிறகு, முளைப்பாரி ஓடுகளை சுற்றித்துடைத்து முளைப்பாரிக்கு பூ சுற்றி, எடுத்து வருவார்கள். முளைப்பாரி சரியாக வளராமல் இருந்தாலோ, அழுகிப்போயிருந்தாலோ அபசகுனமாகக் கருதுவார்கள்.

பாலைய நாட்டின் பள்ளத்தூர் என்ற ஊரில் மட்டும் முளைப்பாரி போட்டு முளைக்கொட்டாமல், (கும்மி) மாரியம்மன் பொங்கல் திருவிழாவின் போது, விளந்தானை அடிப்பார்கள்.ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விளையாட்டின் போது ஆண்கள் வேட்டி கட்டி இருகாலில் கண்ணகி சிலம்பு எனப்படும் சிலம்பு அணிந்து,இரு வரிசையாக நின்று கொண்டு,கோலாட்டக்குச்சிகள் வைத்து விளையாடுவார்கள்.ஒருவர் விளந்தானைப்பாட்டுப் பாட மற்றவர்கள் அதைத்திரும்பப் பாடி ஆடுவார்கள்.மற்ற ஊர்களில் இந்த விளந்தானை கிடையாது.

விளந்தானை பாட்டு

தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே 

பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )

அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )

கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)

ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )

குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )

நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )

வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே

பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)

வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)

ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)

ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)

பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)

சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)

மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)

காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா

மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)

பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே 

கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)

மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)

அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)

கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன் 
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)

எல்லா மக்களும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, நோயின்றி ஆரோக்கியமாக நீடுழி வாழ எங்க ஊர் மாரியாத்தாவை வேண்டுகிறேன். எங்க ஊர் (பாலையூர் - கண்டனூர்) மாரியம்மன் பொங்கல் வரும் செவ்வாய்க்கிழமை (06.04.10) அன்று நடை பெற உள்ளது.புதன் கிழமை காலை பால்குடம்,காவடி,தேர்க்காவடி,பழக்காவடி எடுப்பதும் நடைபெறும்.

24.3.10

கிராமங்கள் ஒளிர்கிறது

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்...

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நாவின் ஈரம் காய்ந்து
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், கேபிள் டிஷ்களும்
சுடிதார்,ஜீன்ஸ்கள் உலரும் கொடிகளும்...
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்...

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
சதா அழும் மனதை
சமாதானப்படுத்தும் அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் ஒளிர்கிறது!.

12.3.10

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள்


அன்பு நிறை சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் அழைப்புக்கிணங்க இந்த இடுகை ..அழைப்பிற்கு நன்றி!



நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..? சரிங்க!

எகிப்தியப்பேரழகி கிளியோபாட் ரா (அழகு,வீரம்,தைரியம்,சாமர்த்தியம்)
மேனாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் (தெளிவு)
விடுதலைப்போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமி பாய் (வீரம்)
பி.சுசீலா அம்மா (இசை)
அன்னை தெரசா (பொறுமை,தியாகம்,சேவை)
பாண்டிச்சேரி அன்னை (தெய்வீகம்)
அன்னை சாரதா (தூய்மை)
கிரண் பேடி (துணிவு)
மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா (தன்னம்பிக்கை)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா(விடா முயற்சி)


நமக்கு உறவா இருக்கக்கூடாது என்ற நிபந்தனையால் இவர்கள் இடம் பெற்றனர்.