கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

13.2.10

பிராயச்சித்தம்

பூக்களில் தேனருந்தும்
வண்ணத்துப்பூச்சிகளை
தும்பைச்செடி பறித்து
ஓங்கியடித்து அழுத்திப்பிடித்து
சிறகுகள் திருகி
வெற்றியின் விகசிப்பு முகத்தில் பரவ
அதன் வண்ணங்கள் கைகளில் ஒட்ட
வாலில் நூல் கட்டி
தும்பி பிடித்து
சிறகுகளைப்பிய்த்தெறிந்து
அதன் வாலிலும் நூல்கட்டி
விளையாடிய வயதில்
விளங்கவில்லை அதன் வலிகள்.

கூட்டுப்புழுக்களாய்
கழிந்த காலம் போய்
வளர்சிதை மாற்றங்களில்
வண்ணத்துப்பூச்சியாய்
பரிணமித்த கதை அறிந்த நாள் முதலாய்
வலிகளைச்சிந்தித்து
வருத்தங்கள் மேலிடும் வயதில் வரும்
கனவுகளில் வலம் வருகிறது
சிறகு இழந்து துடித்த சதைக்கோளங்கள்

கொடுத்தது கிடைக்குமென்றால்
நான் வண்ணத்துப்பூச்சியாய்...
நீ
என் சிறகுகள் பிய்க்கும் சிறுபிள்ளையாய்...

2 கருத்துகள்: