கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

18.8.12

புதுயுகப்பெண்மை




புல்லின் நுனி பனித்துளி ஒன்று
மகுடமானதாய் கர்வப்பட்டது.
பூவின் இதழ் பனித்துளி ஒன்று
பூவை அலங்கரிப்பதாய் அகந்தை கொண்டது.
கதிர் வந்ததும் அவை காணாமல் போனது.

சிப்பியில் விழுந்த பனித்துளி
உலகம் அறியாமலே முத்தானது.
மூடி வைத்த பனித்துளி முத்தானதும்
அழிப்பதென்பதும் கதிரால் ஆகாது.

 தன்
புற அழகில் கர்வம் கொண்டு
அக வளர்ச்சி மறந்து
தானே பொறியாகி
தானே விட்டிலாகி
யாரும் பயணிக்காத புதுப்பாதையில்
நடையிடுகிறது புதுயுகப் பெண்மை.

 நாபியில் தோடு போட்டு
நயனங்களில் கல் பொட்டு வைத்து
மழித்து, வளர்த்து, கூட்டிக்கழித்து
நாளொரு புது பாணி.
கவர்வதும்,கவரப்படுவதுமே முனைப்பாய்
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் இங்கே மறந்தே போனது…..

1 கருத்து: